search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்"

    மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் தொடங்கியது. #NoConfidenceMotion #NoConfidenceDebate
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தெலுங்குதேசம் சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதில் தெலுங்குதேசம் அளித்த நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு விவாதம் நடத்த அனுமதி அளித்தார்.



    அதன்படி பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. தெலுங்கு தேசம் கட்சி எம்பி ஜெயதேவ கல்லா விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். விவாதத்தின் முடிவில் மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

    விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்கு ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு 3 மணி  33 நிமிடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது பெரிய கட்சியான அ.தி.மு.க.வுக்கு 29 நிமிடங்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 27 நிமிடங்களும், பிஜூ ஜனதா தளத்துக்கு 15 நிமிடங்களும், சிவசேனாவுக்கு 14 நிமிடங்களும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்களும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 9 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 7 நிமிடங்கள், சமாஜ்வாதி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 6 நிமிடங்கள்,  லோக் ஜன் சக்தி கட்சிக்கு 5 நிமிடங்கள். மொத்தம் 6 மணி 35 நிமிடங்கள் வரை தீர்மானம் மீது விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பெரும்பான்மையை நிரூபித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்போம் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்த் குமார் தெரிவித்தார்.  #NoConfidenceMotion #NoConfidenceDebate #MonsoonSession 
    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளன. #MonsoonSession #NoConfidenceMotion #ModiGovt
    புதுடெல்லி:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. 18 நாட்கள் கூட்டம் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் ‘முத்தலாக்’ உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு ஆர்வம் கொண்டு உள்ளது. மேலும் புதிதாக 18 மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



    ஆனால்,  ஆளும் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் வரிந்து கட்ட ஆயத்தமாகி வருவதால் கூட்டம் அமைதியாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மத்திய அரசுக்கு எதிராக இந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் எதிர்க்கட்சி எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு கேட்டு வந்தார்.



    இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாமல் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இத்தகவலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.  மேலும் சில கட்சிகளை சந்தித்து இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

    அநேகமாக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீசை நாளை சபாநாயகரிடம் அளிக்கலாம் என தெரிகிறது. எனவே, இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. #MonsoonSession #NoConfidenceMotion #ModiGovt

    ×